என் மலர்
செய்திகள்

அரியலூரில் அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு அரசு பணியாளர்சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) சார்பில் 21மாத ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீன்டும் நடைமுறைபடுத்த கோரியும், ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரியும், சமவேலைக்கு சமஊதியத் துடன் காலமுறை ஊதியம் வழங்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இதில் மாவட்ட பொருளாளர் ராஜசேகர் வரவேற்று பேசினார். மாநில தலைவர் கவியரசன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், அழகுவேல், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந் திரன், கண்ணதாசன் மற்றும் பாலசுப்பிரமணியன், ஏழு மலை, பெரம்பலூர் மாவட்ட தலைவர் மருதமுத்து, பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews






