என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் மூழ்கி மூதாட்டி பலி
ஜெயங்கொண்டம் அருகே ஏரி ஒன்றில் மூதாட்டி ஒருவர் இறந்து மிதந்து கிடந்தார். தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள சம்போடை கிராமத்தில் உள்ள ஏரி ஒன்றில் நேற்று மதியம் மூதாட்டி ஒருவர் இறந்து மிதந்து கிடந்தார். தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
விசாரனையில் இறந்து கிடந்தவர் மேலசெங்கல்மேடு கிராமத்தை சேர்ந்த பூராசாமியின் மனைவி விருத்தாம்பாள்(70) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மீன்சுருட்டி போலீசார் இறந்தவரின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
Next Story






