என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளையார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவர் பலி
    X

    காளையார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவர் பலி

    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்பை பலன் அளிக்காமல் இறந்தார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள நாட்டசரன் கோட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன் ரஞ்சித் (வயது 21), பாஸ்கரன் மகன் பிரபு (20), மூர்த்தி மகன் அஜித் (22), இவர்கள் 3 பேரும் நண்பர்கள். நேற்று 3 பேரும் மோட்டார் சைக்கிளில் காளையார்கோவிலில் இருந்து நாட்டசரன்கோட்டைக்கு வந்து கொண்டி ருந்தனர். அங்குள்ள சோதனைச்சாவடி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    உடனே அஜித், ரஞ்சித், பிரபு ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் பலியானார்.

    பலியான அஜித் முத்துப்பட்டியில் உள்ள ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். படுகாயம் அடைந்த மேலும் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

    Next Story
    ×