என் மலர்
செய்திகள்

காளையார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவர் பலி
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள நாட்டசரன் கோட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன் ரஞ்சித் (வயது 21), பாஸ்கரன் மகன் பிரபு (20), மூர்த்தி மகன் அஜித் (22), இவர்கள் 3 பேரும் நண்பர்கள். நேற்று 3 பேரும் மோட்டார் சைக்கிளில் காளையார்கோவிலில் இருந்து நாட்டசரன்கோட்டைக்கு வந்து கொண்டி ருந்தனர். அங்குள்ள சோதனைச்சாவடி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
உடனே அஜித், ரஞ்சித், பிரபு ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் பலியானார்.
பலியான அஜித் முத்துப்பட்டியில் உள்ள ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். படுகாயம் அடைந்த மேலும் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews






