என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்து தொழிலாளி பலி
Byமாலை மலர்28 Dec 2017 5:34 PM GMT (Updated: 28 Dec 2017 5:34 PM GMT)
ஓசூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்து தொழிலாளி இறந்து போனார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் பெலத்தமடுவு என்ற பகுதியை சேர்ந்தவர் சவுடப்பா (வயது 48). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், ஓசூர் அருகே பத்தலபள்ளி முஸ்லிம் காலனியில் உள்ள ஒரு வீட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் தொட்டிக்குள் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். சவுடப்பாவிற்கு வலிப்பு வந்ததால் அவர் தண்ணீர் தொட்டியில் மயங்கி விழுந்து இருக்கலாம் என்றும், மின்சாரம் தாக்கியதாகவும், விஷவாயு தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என்றும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X