என் மலர்
செய்திகள்

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் 3 கி.மீட்டர் நீந்தி கரை சேர்ந்த இலங்கை மீனவர்கள்
இலங்கை யாழ்பாணம் சாப்னா பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடல் சீற்றத்தினால் படகு கவிழ்ந்தது. அவர்கள் சுமார் 3 கி.மீட்டர் தூரம் நீந்தி இன்று காலை கரையேறினர்.
வேதாரண்யம்:
இலங்கை யாழ்பாணம் சாப்னா பகுதியை சேர்ந்த கடாத்கஜன் (வயது 27). முருகன் (32), விஜேந்திரன் (40). ஆகிய 3 மீனவர்களும் பருத்திதுறை பகுதியில் நேற்று மதியம் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது கடல் சீற்றத்தினால் படகு கவிழ்ந்தது. இதில் கடலில் விழுந்த 3 மீனவர்களும் கரையை நோக்கி நீந்தி வந்தனர். அவர்கள் சுமார் 3 கி.மீட்டர் தூரம் நீந்தி இன்று காலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள காமேஸ்வரம் என்ற இடத்தில் கரையேறினர்.
மிகவும் களைப்புடன் காணப்பட்ட அவர்களை அப்பகுதி மீனவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். உயிர் தப்பிய இந்த 3 மீனவர்களும் இலங்கையில் வசிக்கும் தமிழ் மீனவர்கள் ஆவார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும கடலோர காவல்படை போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை யாழ்பாணம் சாப்னா பகுதியை சேர்ந்த கடாத்கஜன் (வயது 27). முருகன் (32), விஜேந்திரன் (40). ஆகிய 3 மீனவர்களும் பருத்திதுறை பகுதியில் நேற்று மதியம் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது கடல் சீற்றத்தினால் படகு கவிழ்ந்தது. இதில் கடலில் விழுந்த 3 மீனவர்களும் கரையை நோக்கி நீந்தி வந்தனர். அவர்கள் சுமார் 3 கி.மீட்டர் தூரம் நீந்தி இன்று காலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள காமேஸ்வரம் என்ற இடத்தில் கரையேறினர்.
மிகவும் களைப்புடன் காணப்பட்ட அவர்களை அப்பகுதி மீனவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். உயிர் தப்பிய இந்த 3 மீனவர்களும் இலங்கையில் வசிக்கும் தமிழ் மீனவர்கள் ஆவார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும கடலோர காவல்படை போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






