என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
500 மின் கம்பங்கள் உடைந்தன: குமரி மாவட்டம் இருளில் மூழ்கும் அபாயம்
Byமாலை மலர்30 Nov 2017 12:25 PM GMT (Updated: 30 Nov 2017 12:26 PM GMT)
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்து உள்ளன. இதனால் மாவட்டம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்து உள்ளன. நாகர்கோவில், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், சந்தையடி, சாமிதோப்பு போன்ற பகுதிகளில் ஏராளமான மின் கம்பங்கள் உடைந்து விழுந்து விட்டன. மேலும் மின் கம்பங்களில் மரக்கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன. இவற்றை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். மின் கம்பங்களை புதிதாக மாற்ற வேண்டியிருப்பதால் இந்த பணியை உடனடியாக முடிக்க முடியாது. இதனால் குமரி மாவட்டம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்துக்கு அடுத்தபடியாக வாழைகள் அதிகமாக பயிரிடப்படுகிறது. தற்போது சூறாவளி காற்று காரணமாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் வாழை விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்து உள்ளன. நாகர்கோவில், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், சந்தையடி, சாமிதோப்பு போன்ற பகுதிகளில் ஏராளமான மின் கம்பங்கள் உடைந்து விழுந்து விட்டன. மேலும் மின் கம்பங்களில் மரக்கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன. இவற்றை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். மின் கம்பங்களை புதிதாக மாற்ற வேண்டியிருப்பதால் இந்த பணியை உடனடியாக முடிக்க முடியாது. இதனால் குமரி மாவட்டம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்துக்கு அடுத்தபடியாக வாழைகள் அதிகமாக பயிரிடப்படுகிறது. தற்போது சூறாவளி காற்று காரணமாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் வாழை விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X