என் மலர்
செய்திகள்

மூலனூர் பகுதியை சேர்ந்த வழிப்பறி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது
மூலனூர் பகுதியை சேர்ந்த வழிப்பறி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
முத்தூர்:
மூலனூர் அருகே உள்ள ஆயிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 23). வழிப்பறி கொள்ளையனான இவன் மீது பல வழக்குகள் உள்ளது.
வெள்ளகோவில், முத்தூர் ஆகிய பகுதிகளில் இவன் கைவரிசை காட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான்.
இவனிடமிருந்து ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பல வழக்குகளில் இவன் தொடர்பு உள்ளதாக இருப்பதால் சிவகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டரும் அனுமதித்தார்.
இதைத்தொடர்ந்து குண்டர் சட்டத்தில் மேலும் சிவகுமார் கைது செய்யப்பட்டார்.
Next Story