என் மலர்
செய்திகள்

சிங்கம்புணரியில் டென்னிஸ் விளையாடிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு வேளார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 34). சிங்கப்பூரில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி உதயா. 9 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 8 வயதில் மனிஷ் என்ற மகன் உள்ளான். தற்போது உதயா கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக சந்திரசேகரன் சிங்கம் புணரிக்கு வந்தார். நேற்று மாலை அவர், தனது மகன் மற்றும் அருகில் உள்ள சிறுவர்களுடன் டென்னிஸ் விளையாடினார். அப்போது பந்து வீட்டின் அருகில் சென்ற மின்சார வயரில் சிக்கிக் கொண்டது.
அதை எடுப்பதற்காக சந்திரசேகரன், இரும்புக் கம்பியுடன் கூடிய துடப்பத்தை வைத்து வீட்டின் மாடியில் நின்று கொண்டு பந்தை எடுக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக சந்திரசேகரனின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்.ரகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.