என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுராந்தகம் அருகே கல்லூரி பேராசிரியர்-மனைவியை தாக்கி ரூ. 15 ஆயிரம் பறிப்பு
    X

    மதுராந்தகம் அருகே கல்லூரி பேராசிரியர்-மனைவியை தாக்கி ரூ. 15 ஆயிரம் பறிப்பு

    மதுராந்தகம் அருகே கல்லூரி பேராசிரியர், அவரது மனைவியை தாக்கி மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் நகையை பறித்துச் சென்றனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு, வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் ராஜசேகர். தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி அன்பு.

    நேற்று மாலை ராஜசேகர், மனைவியுடன் மதுராந்தகம் அருகே முதுரை கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் இருவரும் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அரையபாக்கம் அருகே சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ராஜசேகர் - அன்புவை தாக்கி அவர்கள் வைத்திருந்த பையை பறித்தனர்.

    இதில் நிலை தடுமாறிய ராஜசேகரும், அன்பும் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர். இதில் அவர்கள் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பையில் ரூ. 15 ஆயிரம், ¼ பவுன் நகை இருந்தது.

    இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×