என் மலர்
செய்திகள்

விராலிமலை அருகே பஸ் மோதி சிறுவன் பலி
விராலிமலை அருகே தனியார் பஸ் மோதியதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ராஜாளிபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கார்த்திக் (வயது 5). இவன் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கார்த்திக் தினமும் பள்ளிக்கு சொந்தமான வேனில் பள்ளி சென்று வருவது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் வந்த கார்த்திக்கை வேன் டிரைவர் ராஜாளிபட்டி பேப்பர் மில் பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டு சென்றார்.
இதையடுத்து கார்த்திக் எதிர்புறம் செல்ல சாலையை கடக்க முயன்றபோது புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறை நோக்கி சென்ற ஒரு தனியார் பஸ் கார்த்திக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 வயது சிறுவன் தனியார் பஸ் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கார்த்திக் எதிர்புறம் செல்ல சாலையை கடக்க முயன்றபோது புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறை நோக்கி சென்ற ஒரு தனியார் பஸ் கார்த்திக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 வயது சிறுவன் தனியார் பஸ் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






