என் மலர்
செய்திகள்

உத்திரமேரூரில் உரக்கடை ஜன்னலை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை
உத்திரமேரூரில் உரக்கடை ஜன்னலை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
உத்திரமேரூர் பஜார் வீதியில் உரக்கடை நடத்தி வருபவர் வேலாயுதம். இவர் விற்பனை பணம் ரூ. 3 லட்சத்தை கடையில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை கடையை திறக்க வந்தபோது ஜன்னல் உடைந்து கிடந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 3 லட்சத்தை காணவில்லை.
நள்ளிரவில் வந்த கொள்ளை கும்பல் கடையின் ஜன்னலை உடைத்து புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.
இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






