என் மலர்
செய்திகள்

மணல் கடத்தல்: தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு
செந்துறையில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட ஆலத்தியூர் ஊராட்சி தெத்தேரி கிராமம் வெள்ளாற்றில் டிப்பர் லாரிகளில் மணல் திருடப்படுவதாக தளவாய் கிராமம் வி.ஏ.ஓ. செல்வக்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வி.ஏ.ஓ. செல்வகுமார், தளவாய் காவல் துறையினர் உதவியுடன் விரைந்து சென்று பார்த்தபோது சிலர் வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர். அந்த லாரி அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி கருப்பையா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதுகுறித்து விஏஓ. செல்வகுமார் புகாரின் பேரில் கருப்பையா மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட ஆலத்தியூர் ஊராட்சி தெத்தேரி கிராமம் வெள்ளாற்றில் டிப்பர் லாரிகளில் மணல் திருடப்படுவதாக தளவாய் கிராமம் வி.ஏ.ஓ. செல்வக்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வி.ஏ.ஓ. செல்வகுமார், தளவாய் காவல் துறையினர் உதவியுடன் விரைந்து சென்று பார்த்தபோது சிலர் வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர். அந்த லாரி அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி கருப்பையா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதுகுறித்து விஏஓ. செல்வகுமார் புகாரின் பேரில் கருப்பையா மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






