என் மலர்
செய்திகள்

நாகை அருகே எலி மருந்து பசையில் பல் துலக்கிய பெண் பலி
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் பாலையூர் பகுதியை சேர்ந்தவர் தங்கையன். இவரது மனைவி மல்லிகா(55). இவர் சம்பவத்தன்று காலை வீட்டில் பல் துலக்கியுள்ளார். ஆனால் பற்பசை என்று நினைத்து பக்கத்தில் இருந்த எலி மருந்து பசையால் பல் துலக்கியதால் அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
இதைக்கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாலையூர் இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
நாகை அடுத்த கீழ்வேளூரை சேர்ந்தவர் பாலையன் (வயது 45). இவர் அபபகுதியில் உள்ள அஞ்சுவட்டத்தம்மன் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பாலையன் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் அமுதாராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






