என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.17 லட்சம் போனஸ்: அமைச்சர் கருப்பணன் வழங்கினார்
ஈரோடு:
கவுந்தப்பாடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கும் விழா நடந்தது. விழாவில் தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டு போனஸ் வழங்கினார்.
செந்தாம்பாளையம் கலைவாணர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கவுந்தப்பாடி சக்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் கவுந்தப்பாடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஆகிய கைத்தறி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் பிச்சை முத்து முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ், கலைவாணர் கூட்டுறவு சங்கத்தலைவர் மாரிமுத்து, மேலாண்மை இயக்குனர் பழனிக்குமார், மேலாளர் கந்தசாமி, சக்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் பெரியசாமி, மேலாண்மை இயக்குனர் ஜானகி, மேலாளர் ராஜேந்திரன், கவுந்தப்பாடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் மாதேஸ் வரன், மேலாண்மை இயக்குனர் மாலதி, மேலாளர் தண்டபாணி, முன்னாள் சேர்மேன் தங்கவேல், கவுந்தப்பாடி வட்டார கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர்கள், மேலாளர்கள், இயக்குனர்கள், கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்