என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் பொது விநியோக குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
    X

    அரியலூரில் பொது விநியோக குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

    அரியலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம் நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான “பொது மக்கள் குறைதீர் கூட்டம்” அரியலூர் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.

    அரியலூர் வட்டத்தில் இலந்தைக்கூடம் கிராமத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் உல்லியக்குடி கிராமத்திலும், செந்துறை வட்டத்தில் தளவாய் (தெற்கு) கிராமத்திலும் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஸ்ரீராமன் கிராமத்திலும் நடைபெறவுள்ளது.

    அரியலூர் வட்டத்திற்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), உடையார்பாளையம் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலரும், செந்துறை வட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரும், ஆண்டிமடம் வட்டத்திற்கு பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளரும் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கூட்டத்தினை வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். கூட்டத்தில் கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×