என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழிங்கநல்லூரில் குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
Byமாலை மலர்30 Sep 2017 10:13 AM GMT (Updated: 30 Sep 2017 10:13 AM GMT)
சோழிங்கநல்லூரில் குட்டையில் மூழ்கி சிறுவன் பலியானார். இந்த சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:
சென்னை சோழிங்க நல்லூர் அடுத்த செம்மஞ்சேரி அம்பேத்கர் நகரில் வசிப்பவர் ஏழுமலை. மயிலாப்பூரில் தனியார் டிராவல்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகன் பிரவீன் குமார் (வயது 6).
நேற்று ஆயுதபூஜை கொண்டாடுவதற்காக அனைத்து வேலைகளையும் செய்து முடித்த கணவன்-மனைவி இருவரும் மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பிரவீன் குமார் வீட்டின் பின் பகுதியில் உள்ள குட்டையில் விளையாட சென்றுள்ளான்.
தூங்கி எழுந்த கணவன்-மனைவி இருவரும் மகன் பிரவீன் குமாரை காணவில்லை என அக்கம் பக்கம் முழுவதும் தேடினர். மகன் கிடைக் காததால் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் பிரவீன் குமார் வீட்டின் பின்புறம் உள்ள குட்டையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. செம்மஞ்சேரி போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் குட்டையில் இருந்து அதிகாலை 3 மணியளவில் பிரவீன்குமார் உடலை மீட்டனர். விளையாட சென்ற சிறுவன் குட்டையில் தவறி விழுந்து இறந்தானா அல்லது வேறு காரணமா என செம்மஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சோழிங்க நல்லூர் அடுத்த செம்மஞ்சேரி அம்பேத்கர் நகரில் வசிப்பவர் ஏழுமலை. மயிலாப்பூரில் தனியார் டிராவல்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகன் பிரவீன் குமார் (வயது 6).
நேற்று ஆயுதபூஜை கொண்டாடுவதற்காக அனைத்து வேலைகளையும் செய்து முடித்த கணவன்-மனைவி இருவரும் மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பிரவீன் குமார் வீட்டின் பின் பகுதியில் உள்ள குட்டையில் விளையாட சென்றுள்ளான்.
தூங்கி எழுந்த கணவன்-மனைவி இருவரும் மகன் பிரவீன் குமாரை காணவில்லை என அக்கம் பக்கம் முழுவதும் தேடினர். மகன் கிடைக் காததால் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் பிரவீன் குமார் வீட்டின் பின்புறம் உள்ள குட்டையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. செம்மஞ்சேரி போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் குட்டையில் இருந்து அதிகாலை 3 மணியளவில் பிரவீன்குமார் உடலை மீட்டனர். விளையாட சென்ற சிறுவன் குட்டையில் தவறி விழுந்து இறந்தானா அல்லது வேறு காரணமா என செம்மஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X