என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலை செய்த கடையில் ரூ.8 லட்சம் பொருட்கள் திருடி விற்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
Byமாலை மலர்28 Sep 2017 10:51 AM GMT (Updated: 28 Sep 2017 10:51 AM GMT)
வேலை செய்த கடையில் ரூ.8 லட்சம் பொருட்கள் திருடி விற்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவை:
கோவை விலாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் மோசஸ் (வயது 28). இவர் கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
வேலை செய்தபோது விலை உயர்ந்த பொருட்களை திருடி டிபன் பாக்சில் மறைத்து அருகில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வந்தார். கடந்த 2010-ம் ஆண்டு கடை உரிமையாளர் ஊழியர் மோசசை கையும், களவுமாக பிடித்தார். விசாரணையில் 2 ஆண்டுகளாக இந்த நூதன திருட்டில் ஈடுபட்டதும், ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்களை அவர் திருடியிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மோசஸ் மீதான வழக்கு கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 3-ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வேலுச்சாமி கடையில் நூதன முறையில் திருடிய மோசசுக்கு 3 வருட சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X