என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே கோவில் குளத்தில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி
    X

    காஞ்சீபுரம் அருகே கோவில் குளத்தில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி

    காஞ்சீபுரம் அருகே கோவில் குளத்தில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ்குமார் (13). திருப்புட்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை ஆகாஷ்குமார் காலாண்டு தேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் திருப்புட்குழியில் உள்ள விஜயராகவபெருமாள் கோயில் குளத்தில் குளிக்க சென்றார்.

    அப்போது தண்ணீரில் மூழ்கி தத்தளிததார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே ஆகாஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×