என் மலர்
செய்திகள்

சரவணம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
சரவணம்பட்டி:
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 37). இவர் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேட்டில் தங்கி இருந்து அங்குள்ள வெல்டிங் பட்டறையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை இவர் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முருகேஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story