என் மலர்

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கொல்லித் தீவு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். முருகேசன் வேதாரணயத்தில் உள்ள ஒரு கோழி கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே தெருவில் பக்கத்து வீட்டில் செல்வகுமார்(35) மனைவி சுதாவுடன் வசித்து வருகிறார்.

    கடந்த 26-ந்தேதி காலை மாரியம்மாள் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க வந்தபோது அங்கு வந்த சுதா, மாரியம்மாளிடம் உன் போட்டோ என் கணவர் சட்டைப்பையில் எப்படி வந்தது எனக் கேட்க, இதில் ஏற்பட்ட தகராறில் கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டார்களாம். இதில் மனமுடைந்த மாரியம்மாள் வீட்டிற்கு சென்று எலி மருந்தை சாப்பிட்டு விட்டார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக திரூவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அறிவழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயேந்திரசரஸ்வதி, கார்த்திகேயன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் மாரியம்மாள் இறந்ததை அறிந்த செல்வகுமாரும் நேற்று வி‌ஷம் குடித்து விட்டார். செல்வகுமாரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு தீவிர சிகிச்சைக்காக் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×