என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அரியலூரில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
Byமாலை மலர்21 Aug 2017 2:15 PM GMT (Updated: 21 Aug 2017 2:20 PM GMT)
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்று பேசினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. துரை.மணிவேல், முன்னாள் எம்.பி. இளவரசன் மற்றும் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார்கள்.
தொடர்ந்து விழாக்குழு தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதிகாரிகள் நிதி இல்லை என்றனர். மக்களிடம் கையேந்தி இந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று நிறைவேற்றினார். அவர் வழியில் அம்மா அனைத்து திட்டத்தையும் நிறைவேற்றினார். அவரின் 100-வது ஆண்டு விழாவில் அரியலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் திரண்டு வந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், மருதமுத்து, குமரவேல், கல்யாணசுந்தரம், வரதராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. துரை.மணிவேல், முன்னாள் எம்.பி. இளவரசன் மற்றும் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார்கள்.
தொடர்ந்து விழாக்குழு தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதிகாரிகள் நிதி இல்லை என்றனர். மக்களிடம் கையேந்தி இந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று நிறைவேற்றினார். அவர் வழியில் அம்மா அனைத்து திட்டத்தையும் நிறைவேற்றினார். அவரின் 100-வது ஆண்டு விழாவில் அரியலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் திரண்டு வந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், மருதமுத்து, குமரவேல், கல்யாணசுந்தரம், வரதராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X