என் மலர்
செய்திகள்

பாலவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சென்னை பல்கலைக்கழக ஊழியர் பலி
பாலவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சென்னை பல்கலைக்கழக ஊழியர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவான்மியூர்:
பாலவாக்கம், பல்கலை நகரை சேர்ந்தவர் ஜோசப் (வயது 28). சென்னை பல்கலைக்கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சுதீசுடன் திருவான்மியூரில் இருந்து பாலவாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கிழக்கு கடற்கரை சாலை வி.ஜி.பி.-லேஅவுட் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜோசப் பலியானார். சுதீசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று மாலை நின்று கொண்டு இருந்த மாநகர பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
அவர்களை பற்றிய விபரம் இதுவரை தெரியவில்லை. மோட்டார் சைக்கிளில் சாவி இல்லை. வயர் துண்டிக்கப்பட்டு அதனை ஓட்டி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து பலியான 2 வாலிபர்களும் பழைய குற்றவாளிகளா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலவாக்கம், பல்கலை நகரை சேர்ந்தவர் ஜோசப் (வயது 28). சென்னை பல்கலைக்கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சுதீசுடன் திருவான்மியூரில் இருந்து பாலவாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கிழக்கு கடற்கரை சாலை வி.ஜி.பி.-லேஅவுட் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜோசப் பலியானார். சுதீசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று மாலை நின்று கொண்டு இருந்த மாநகர பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
அவர்களை பற்றிய விபரம் இதுவரை தெரியவில்லை. மோட்டார் சைக்கிளில் சாவி இல்லை. வயர் துண்டிக்கப்பட்டு அதனை ஓட்டி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து பலியான 2 வாலிபர்களும் பழைய குற்றவாளிகளா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






