என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில், 15-ந் தேதி 633 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வரும் 15-ந்தேதி (செவ்வாய் கிழமை) சுதந்திரத்தினத்தன்று 633 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வரும் 15-ந்தேதி (செவ்வாய் கிழமை) சுதந்திரத்தினத்தன்று 633 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் தனி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் இந்த கிராம சபைக்கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பான சிக்கன நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல், சுற்றுப்புறங்களை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






