என் மலர்
செய்திகள்

செந்துறை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
செந்துறை அருகே வயலை பார்த்துவிட்டு வந்த பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கீழமசூதித் தெருவை சேர்ந்தவர் தங்கராசு மனைவி தங்கபொண்ணு(55). இவர் நேற்று தங்களுக்கு சொந்தமான வயலை பார்த்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திட்டகுடிக்கு செல்லும் சாலை எது என கேட்டுள்ளார். அதற்கு தங்கபொண்ணு பதில் கொடுக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்து கொண்டு இருசக்கரவாகனத்தில் சென்றுவிட்டார்.
இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






