என் மலர்
செய்திகள்

அரியலூரில் தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம்: விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ஆலோசனை
அரியலூர்:
அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் அரியலூர் செந்தமிழ் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலா ளர்கள் கவியரசன், தெய்வா, திருமானூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், ஜெகதீசன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் அறிவழகன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் குமாரதேவன், செந்துறை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் தாமஸ்ஏசுதாஸ் வரவேற்றார்.
கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அனைவரும் கொண்டாட வேண்டும், அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகள், நகரம், பேரூர் வார்டுகளில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சின்னபாண்டு, முன்னாள் மாவட்ட ரசிகர் மன்ற செயலாளர் ஜோசப் சத்திய மூர்த்தி, முன்னாள் பொதுக்குழு குழு உறுப்பினர்கள் தங்க ஜெயபாலன், செந்தில், உடையார்பாளையம் பேரூராட்சி செயலாளர் முனியசாமி, மாவட்ட கேப்டன் மன்ற நிர்வாகிகள் சேகர், புயல் செல்வம், முத்து, மாணவரணி சதீஸ்,
மாவட்ட தொண்டரணி நல்லதம்பி, கணேசன், ராமச்சந்திரன், பழனிவேல், மாவட்ட தொழிற் சங்க நிர்வாகிகள் வேலுமணி, பாண்டியன், சகாதேவன் மற்றும் அரியலூர் நகர நிர்வாகிகள் மதி, ராஜா, சேகர், ரமேஷ், அலுமினிய ரமேஷ், பூங்காவனம், கண்ணன், செல்வகுமார், சக்திவேல், முருகன், மருதை, நமச்சி வாயம், அரியலூர் ஒன்றிய நிர்வாகிகள் செந்தில், சசி குமார், ராஜீவ்காந்தி, மகேஷ்வரி, செல்வராணி, ஜெய்சங்கர், பழனிச்சாமி, அய்யா துரை, பாலு உட்பட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் அரியலூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.






