என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்மஞ்சேரியில் ஏரியை மூட பொதுமக்கள் எதிர்ப்பு - மறியல்
    X

    செம்மஞ்சேரியில் ஏரியை மூட பொதுமக்கள் எதிர்ப்பு - மறியல்

    செம்மஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியை மூட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி, குடிசை மாற்று வாரியம் அருகே உள்ள ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஏரியை முழுவதும் மூட உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். ஏரியை மூட எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.

    உதவி பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏரியை மூடும் உத்தரவை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×