என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
    X

    காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் காமாட்சியம்மன் காலனியில் வசிப்பவர் தேவகுமார் (வயது27). லாரி டிரைவர். இவர் மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு - கிளார் பைபாஸ் சாலையில் சென்றார்.

    அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த தேவகுமார் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×