என் மலர்
செய்திகள்

சென்னிமலை பகுதியில் ஒரே ஊரில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
சென்னிமலை பகுதியில் ஒரே ஊரை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவலாக இருந்து வருகிறது. இதே போல் சென்னிமலை பகுதியிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னி மலை அருகே உள்ள எல்லைக் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் இதே ஊரில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கல்லூரி படிப்பை முடித்த அபிநயா (வயது 23) என்ற மகள் உள்ளார்.
அபிநயாவுக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அபிநயாவுக்கு மீண்டும் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது.
பிறகு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய உடல் நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அபிநயாவின் உடலில் ரத்த அணுக்கள் வெகுவாக குறைந்து டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அபிநாயா சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அதே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் செயலாளராக உள்ள சுப்பிரமணியம் (48) என்பவருக்கும் டெங்கு அறிகுறி காணப்பட்டு மருத்துவமனையில் சிசிக்சை பெற்றார். மேலும் எல்லைக் குமாரபாளையத்தில் பலருக்கு டெங்கு இருப்பதற்கான அறிகுறி காணப்பட்டுள்ளது.
எல்லைக் குமாரபாளையத்தில் உள்ள கதிர்வேல் என்பவரின் 9 மாதமே ஆன கை குழந்தைக்கும் டெங்கு அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதே ஊரை சேர்ந்த மெத்தை வீடு கந்தசாமி (52), சாந்தி (30), சவுந்திரம் (59), சாரதா (35), இவருடைய மகன் அகில் (16), பாப்பாள் (55) என்பவர் உட்பட 15 பேருக்கும் மேல் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போல் நாமக்கல் பாளையம் பகுதியினை சேர்ந்த கராத்தே மாஸ்டர் மனோகரன் என்பவரின் மகள் பவித்ரா என்ற 6 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த பூர்கவி என்ற 12 வயது சிறுவனுக்கும் டெங்கு காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பகுதியிலும் பலருக்கும் காய்ச்சல் உள்ளது. எல்லைக் குமாரபாளையத்தில் டெங்கு காய்ச்சல் பரவியதை அடுத்து காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குமார் தலைமையில் செவிலியர் குழுவினர் கடந்த 5 நாட்களாக எல்லைக் குமார பாளையத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் டெங்குவை ஒழிப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். நாமக்கல் பாளையம் பகுதியிலும் சென்னிமலை சுகாதாரதுறை அலுவலர்கள் மருந்து தெளித்து சுகாதார பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவலாக இருந்து வருகிறது. இதே போல் சென்னிமலை பகுதியிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னி மலை அருகே உள்ள எல்லைக் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் இதே ஊரில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கல்லூரி படிப்பை முடித்த அபிநயா (வயது 23) என்ற மகள் உள்ளார்.
அபிநயாவுக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அபிநயாவுக்கு மீண்டும் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது.
பிறகு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய உடல் நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அபிநயாவின் உடலில் ரத்த அணுக்கள் வெகுவாக குறைந்து டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அபிநாயா சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அதே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் செயலாளராக உள்ள சுப்பிரமணியம் (48) என்பவருக்கும் டெங்கு அறிகுறி காணப்பட்டு மருத்துவமனையில் சிசிக்சை பெற்றார். மேலும் எல்லைக் குமாரபாளையத்தில் பலருக்கு டெங்கு இருப்பதற்கான அறிகுறி காணப்பட்டுள்ளது.
எல்லைக் குமாரபாளையத்தில் உள்ள கதிர்வேல் என்பவரின் 9 மாதமே ஆன கை குழந்தைக்கும் டெங்கு அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதே ஊரை சேர்ந்த மெத்தை வீடு கந்தசாமி (52), சாந்தி (30), சவுந்திரம் (59), சாரதா (35), இவருடைய மகன் அகில் (16), பாப்பாள் (55) என்பவர் உட்பட 15 பேருக்கும் மேல் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போல் நாமக்கல் பாளையம் பகுதியினை சேர்ந்த கராத்தே மாஸ்டர் மனோகரன் என்பவரின் மகள் பவித்ரா என்ற 6 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த பூர்கவி என்ற 12 வயது சிறுவனுக்கும் டெங்கு காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பகுதியிலும் பலருக்கும் காய்ச்சல் உள்ளது. எல்லைக் குமாரபாளையத்தில் டெங்கு காய்ச்சல் பரவியதை அடுத்து காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குமார் தலைமையில் செவிலியர் குழுவினர் கடந்த 5 நாட்களாக எல்லைக் குமார பாளையத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் டெங்குவை ஒழிப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். நாமக்கல் பாளையம் பகுதியிலும் சென்னிமலை சுகாதாரதுறை அலுவலர்கள் மருந்து தெளித்து சுகாதார பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story






