என் மலர்
செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதல்
சிவகங்கை:
ஒரு வாரமாக சிவங்கங்கை மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி கடுமையான வெயில் அடிக்கிறது. போதிய மழை இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒரு வாரமாக காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காரைக்குடி தாலுகா சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சை பெற்றும் ஒருவாரமாகியும் குணமடையவில்லை.
மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லை. டாக்டர்கள் சரிவர கவனிப்பதில்லை. இதனால் அனைவரும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லூரிகளில் 5 பேர் தொடர் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அரசு மருத்துவ மனைகளில் மர்ம காய்ச்சலால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.






