என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி
    X

    பெருந்துறை அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி

    பெருந்துறை அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பெருந்துறை அடுத்த கம்புளியம்பட்டி, காசிலிங்க கவுண்டர்புதூரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி வள்ளியம்மாள்(வயது70). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    பொன்னுசாமி 3 வருடத்திற்கு முன் இறந்து விட்டார். மகன்கள் இரண்டு பேருக்கும் திருமணமாகி வேறு இடத்தில் வசித்து வருகிறார்கள்.

    வள்ளியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். வள்ளியம்மாள் ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தார்.

    சம்பவத்தன்று வள்ளியம்மாள் அதே பகுதியில் உள்ள பெரிய தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டு அந்த பகுதியில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து வேப்பங் கொட்டையை பறித்து கொண்டு இருந்தார்.

    அப்போது புதரில் இருந்து வந்த பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக வள்ளியம்மாளை கடித்தது. இது குறித்து வள்ளியம்மாள் தனது மகனிடம் தெரிவித்தார்.

    108 ஆம்புலன்சுக்கு மூலம் வள்ளியம்மாளை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×