என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே ‘குண்டர்’ சட்டத்தில் கொள்ளையன் கைது: 2-வது முறையாக கைதானான்
    X

    கோபி அருகே ‘குண்டர்’ சட்டத்தில் கொள்ளையன் கைது: 2-வது முறையாக கைதானான்

    கோபி அருகே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட கொள்ளையன் மீண்டும் 2-வது தடவையாக குண்டர் சட்டத்தில் கைதாகிறார்.
    கோபி:

    கோபி அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் இம்ரான் (வயது 29). இவன் கடந்த மாதம் 12-ந்தேதி கோபி அம்பிகை நகரில் தொழில் அதிபர் பாபு வீட்டில் புகுந்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்தான்.

    மேலும் கோபி பஸ்நிலைய பகுதியில் யுவராஜ் என்பவரிடம் கத்தி முனையில் பணம் பறித்தான். மேலும் இவன் மீது பல வழிப்பறி-கொள்ளை வழக்குகளும் உள்ளது.

    கோபி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இம்ரானை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிறகு அவன் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டான்.

    இதேபோல் மேலும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடாமல் இருக்க இம்ரானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோபி போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாருக்கு பரிந்துரை செய்தனர். எஸ்.பி.யும் மாவட்ட கலெக்டருக்கு அதன்படி பரிந்துரை செய்தார்.

    கலெக்டரும் அவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இம்ரான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

    இம்ரான் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டான். இப்போது மீண்டும் 2-வது தடவையாக குண்டர் சட்டத்தில் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×