என் மலர்
செய்திகள்

புஞ்சை புளியம்பட்டி அருகே 2 வேன்கள் மோதல்: 9 பேர் படுகாயம்
ஈரோடு:
புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி ஒரு வேன் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அந்த வேன் புஞ்சை புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி என்ற இடத்தில் வந்தது.
அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது அந்த வேனும், சத்தியமங்கலத்தில் இருந்து புஞ்சை புளியம்பட்டி நோக்கி வந்த மற்றொரு வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் 2 வேன்களும் பலத்த சேதம் அடைந்தன. கண்ணாடிகள் நொறுங்கின. 2 வேன்களிலும் இருந்த 9 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர்.
கோபி ஸ்டாலின்நகரை சேர்ந்த சத்யா (வயது 17), அய்யம்மாள் (45), சுப்பிரமணி (43), தீபக் (16), கோபி குள்ளம் பாளையத்தை சேர்ந்த பெருமாள் (38),
புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த முரளி (35), யோக நாயகி (21), கோவையை சேர்ந்த சரஸ்வதி (50), செல்வம் (40).
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் புஞ்சை புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிடடனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






