என் மலர்
செய்திகள்

பவானி கைத்தறி பட்டறைகளில் கலால்துறை அதிகாரிகள் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கைத்தறி பட்டறைகளில் மத்திய கலால்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ஈரோடு:
தமிழக அரசு பவானியில் நெசவு செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஜமுக்காளங்களுக்கு தள்ளுபடி மானியம் வழங்கி வருகிறது.
கடந்த 1-ந் தேதி மத்திய அரசு அறிவித்த மத்திய சரக்கு மற்றும் சேவை வரியில் ஜமக்காளங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி, அந்தியூரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கூட்டுறவு கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் ஜமக்காள விற்பனையை நிறுத்தி வைத்துள்ளன.
ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் குழப்பமான சூழலில் ரூ.1.50 கோடி மதிப்பிலான ஜமுக்காளங்கள் விற்பனை செய்யப்படாமல் தேங்கி உள்ளது. பவானி ஜமக்காளம் முற்றிலும் கைத்தறியில் நெசவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
வட மாநிலங்களில் கார்பெட் போன்ற ஜமக்காளம் பவர் லூமில் தயார் செய்யப்படுகிறது.
எனவே இது குறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானி கைத்தறி ஜமுக்காள வியாபாரிகள் சங்கம், பவானி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களின் உறுப்பினர்கள் கூட்டமைப்பு, பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்ஷீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மத்திய கலால்துறை உதவி ஆணையர் பூபால், ஆய்வாளர் காயத்ரி, கண்காணிப்பாளர்கள் முத்துவேல், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட குழுவினர் பவானியில் கைத்தறிப் பட்டறைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது, கைத்தறியில் நெசவு செய்யப்படும் முறைகள், தறிப்பட்டறைகள், நூல்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
விசைத்தறிக்கும், கைத் தறிக்கும் உள்ள வித்தியாசம், உற்பத்தி வேறுபாடு குறித்தும் விளக்கப்பட்டது.
பவானி கைத்தறி ஜமுக்காள வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்பாபு, செந்தில்குமார், பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்சீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கச் செயலர் சித்தையன், கூட்டுறவு நெசவாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்க பாரதி, பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழக அரசு பவானியில் நெசவு செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஜமுக்காளங்களுக்கு தள்ளுபடி மானியம் வழங்கி வருகிறது.
கடந்த 1-ந் தேதி மத்திய அரசு அறிவித்த மத்திய சரக்கு மற்றும் சேவை வரியில் ஜமக்காளங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி, அந்தியூரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கூட்டுறவு கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் ஜமக்காள விற்பனையை நிறுத்தி வைத்துள்ளன.
ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் குழப்பமான சூழலில் ரூ.1.50 கோடி மதிப்பிலான ஜமுக்காளங்கள் விற்பனை செய்யப்படாமல் தேங்கி உள்ளது. பவானி ஜமக்காளம் முற்றிலும் கைத்தறியில் நெசவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
வட மாநிலங்களில் கார்பெட் போன்ற ஜமக்காளம் பவர் லூமில் தயார் செய்யப்படுகிறது.
எனவே இது குறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானி கைத்தறி ஜமுக்காள வியாபாரிகள் சங்கம், பவானி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களின் உறுப்பினர்கள் கூட்டமைப்பு, பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்ஷீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மத்திய கலால்துறை உதவி ஆணையர் பூபால், ஆய்வாளர் காயத்ரி, கண்காணிப்பாளர்கள் முத்துவேல், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட குழுவினர் பவானியில் கைத்தறிப் பட்டறைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது, கைத்தறியில் நெசவு செய்யப்படும் முறைகள், தறிப்பட்டறைகள், நூல்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
விசைத்தறிக்கும், கைத் தறிக்கும் உள்ள வித்தியாசம், உற்பத்தி வேறுபாடு குறித்தும் விளக்கப்பட்டது.
பவானி கைத்தறி ஜமுக்காள வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்பாபு, செந்தில்குமார், பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்சீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கச் செயலர் சித்தையன், கூட்டுறவு நெசவாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்க பாரதி, பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story






