என் மலர்
செய்திகள்

திருப்போரூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 15 பேர் உயிர் தப்பினர்
திருப்போரூர் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
திருப்போரூர்:
மாமல்லபுரத்தைச்சேர்ந்த 15 பேர் திருவண்ணாமலைக்கு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வேனில் சென்றனர். பின்னர் அவர்கள் இன்று காலை திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
தண்டலம் பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பையனூரைச் சேர்ந்த வேன் டிரைவர் செந்தில் மற்றும் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அதிஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர். காயமடைந்த 3 பேரும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து திருப்போரூர் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மாமல்லபுரத்தைச்சேர்ந்த 15 பேர் திருவண்ணாமலைக்கு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வேனில் சென்றனர். பின்னர் அவர்கள் இன்று காலை திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
தண்டலம் பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பையனூரைச் சேர்ந்த வேன் டிரைவர் செந்தில் மற்றும் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அதிஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர். காயமடைந்த 3 பேரும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து திருப்போரூர் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






