என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் மோதல்: 8 பேர் கைது
    X

    சிதம்பரத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் மோதல்: 8 பேர் கைது

    சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது இரு கோஷ்டியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டி, தாக்கி கொண்டனர்.

    மேலும் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக கட்சியின் மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நிர்வாகி மணிரத்தினத்தின் ஆதரவாளர் ஜோசப்டென்சன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார்.

    இதையொட்டி தெற்குமாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் விஜயசுந்தரம் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் எம்.ஜி.ஆர். தோட்டம் செந்தில்குமார்(55), கோழிபள்ளம் தமிழரசன்(48) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல், விஜயசுந்தரத்தின் ஆதரவாளர் புவனேஷ் கொடுத்த புகாரின் பேரில் மணிரத்தினம் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜோசப்டென்சன்(43), தயாளன்(30), வஞ்சிதேவன்(28), தங்கத்துரை(35), கருணாநிதி(35), குமார்(33) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×