என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் ஏ.டி.எம். கார்டு மூலம் முதியவர்களிடம் பண மோசடி - வாலிபர் கைது
ஜெயங்கொண்டம் பகுதியில் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் பறித்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் இளவரசன் ( வயது 53). நேற்று இவர் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள தேசிய வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ரூ.31,500 எடுத்துக்கொண்டு சந்தை வழியாக நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் திடீரென அரிவாளை காட்டி மிரட்டி, இளவரசன் வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து இளவரசன் ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப் பதிவு செய்து வாலிபரை தேடி வந்தார்.
இதனிடையே கோடங்குடி மெயின்ரோட்டை சேர்ந்த சீனிவாசன் மனைவி சரோஜா (58) என்பவர் கடந்த 21-ந்தேதி ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.2 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். அப்போது மீதி தொகையை காட்டாததால் அருகில் நின்றுகொண்டிருந்த நபர் தான் பார்த்து சொல்கிறேன், உங்கள் கார்டை கொடுங்கள் என்று கூறி மீதி தொகையை பார்த்துள்ளார். அப்போது கணக்கில் ரூ.44,520 இருந்துள்ளது. அதனை சரோஜாவிடம் கூறிய அந்த நபர், நைசாக தான் வைத்திருந்த போலி ஏ.டி.எம்.கார்டை சரோஜாவிடம் கொடுத்து விட்டு, ஒரிஜினல் கார்டை அவர் வைத்துக்கொண்டார்.
கடந்த 28-ந்தேதி சரோஜா பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். சென்றார். அப்போது பணம் எடுத்த போது கார்டு வேலை செய்யாததால், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று சரி பார்த்தார். அப்போது 21-ந் தேதி அவரது கணக்கிலிருந்து அனைத்து பணமும் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சரோஜா ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் எஸ்.ஐ. சுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் சென்னை மடிப்பாக்கம் 3-வது குறுக்குத் தெருவை சேர்ந்த செல்வராஜ் (61) என்பவர் கடந்த 28-ம் தேதி தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங் காவல் கிராமத்திற்கு வந்திருந்தார். பின்னர் மீண்டும் ஊருக்கு செல்வதற்கு பணம் எடுப்பதற்காக ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரிடம் ரூ.500 பணம் எடுத்துக்கொடுக்க கூறியுள்ளார். அந்த நபரும் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட செல்வராஜ் சென்னை பேருந்தில் ஏறி சிறிது தூரம் சென்றுகொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு 2 மெசேஜ் வந்துள்ளது.
அதனை பார்த்தபோது ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.9,500 பணம் எடுத்துள்ளதாக வந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தவர், தனது பையில் உள்ள ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அது போலியான கார்டு என தெரியவந்தது.
இதையடுத்து பேருந்தில் இருந்து இறங்கி மீண்டும் ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.ஐ. தமிழரசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார். ஏ.டி.எம். மூலம் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மோசடி நபரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
நேற்று ஜெயங்கொண்டம் - செந்துறை பிரிவு சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபரை மறித்து விசாரித்ததில், அந்த நபர் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் (27) என்பதும், ஏ.டி.எம். மையத்திற்கு வரும் வயதானவர்களை குறிவைத்து பணம் எடுத்துக்கொடுப்பதாக கூறி போலி கார்டு கொடுத்து பணம் பறித்ததும், மேலும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சுந்தர் ராஜனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இன்னும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் இளவரசன் ( வயது 53). நேற்று இவர் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள தேசிய வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ரூ.31,500 எடுத்துக்கொண்டு சந்தை வழியாக நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் திடீரென அரிவாளை காட்டி மிரட்டி, இளவரசன் வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து இளவரசன் ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப் பதிவு செய்து வாலிபரை தேடி வந்தார்.
இதனிடையே கோடங்குடி மெயின்ரோட்டை சேர்ந்த சீனிவாசன் மனைவி சரோஜா (58) என்பவர் கடந்த 21-ந்தேதி ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.2 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். அப்போது மீதி தொகையை காட்டாததால் அருகில் நின்றுகொண்டிருந்த நபர் தான் பார்த்து சொல்கிறேன், உங்கள் கார்டை கொடுங்கள் என்று கூறி மீதி தொகையை பார்த்துள்ளார். அப்போது கணக்கில் ரூ.44,520 இருந்துள்ளது. அதனை சரோஜாவிடம் கூறிய அந்த நபர், நைசாக தான் வைத்திருந்த போலி ஏ.டி.எம்.கார்டை சரோஜாவிடம் கொடுத்து விட்டு, ஒரிஜினல் கார்டை அவர் வைத்துக்கொண்டார்.
கடந்த 28-ந்தேதி சரோஜா பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். சென்றார். அப்போது பணம் எடுத்த போது கார்டு வேலை செய்யாததால், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று சரி பார்த்தார். அப்போது 21-ந் தேதி அவரது கணக்கிலிருந்து அனைத்து பணமும் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சரோஜா ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் எஸ்.ஐ. சுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் சென்னை மடிப்பாக்கம் 3-வது குறுக்குத் தெருவை சேர்ந்த செல்வராஜ் (61) என்பவர் கடந்த 28-ம் தேதி தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங் காவல் கிராமத்திற்கு வந்திருந்தார். பின்னர் மீண்டும் ஊருக்கு செல்வதற்கு பணம் எடுப்பதற்காக ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரிடம் ரூ.500 பணம் எடுத்துக்கொடுக்க கூறியுள்ளார். அந்த நபரும் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட செல்வராஜ் சென்னை பேருந்தில் ஏறி சிறிது தூரம் சென்றுகொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு 2 மெசேஜ் வந்துள்ளது.
அதனை பார்த்தபோது ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.9,500 பணம் எடுத்துள்ளதாக வந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தவர், தனது பையில் உள்ள ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அது போலியான கார்டு என தெரியவந்தது.
இதையடுத்து பேருந்தில் இருந்து இறங்கி மீண்டும் ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.ஐ. தமிழரசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார். ஏ.டி.எம். மூலம் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மோசடி நபரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
நேற்று ஜெயங்கொண்டம் - செந்துறை பிரிவு சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபரை மறித்து விசாரித்ததில், அந்த நபர் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் (27) என்பதும், ஏ.டி.எம். மையத்திற்கு வரும் வயதானவர்களை குறிவைத்து பணம் எடுத்துக்கொடுப்பதாக கூறி போலி கார்டு கொடுத்து பணம் பறித்ததும், மேலும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சுந்தர் ராஜனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இன்னும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
Next Story






