search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கோலம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்ணிடம் செயின் பறிப்பு
    X

    தக்கோலம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்ணிடம் செயின் பறிப்பு

    தக்கோலம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 4 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    தக்கோலம்:

    அரக்கோணம் அடுத்த தக்கோலம் கணபதிபுரம் கிராமத்தில் நேற்று முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த பட்டாபி மனைவி வசந்தா (வயது65). என்பவர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வசந்தா அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து தக்கோலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×