என் மலர்
செய்திகள்

சத்தியமங்கலத்தில் கூட்டுறவு ரேசன் கடை பணியாளர் தற்கொலை
சத்தியமங்கலத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து கூட்டுறவு ரேசன் கடை பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
சத்தியமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் நடராஜன்(வயது52). இவரது மனைவி அகிலா. இவர்களுக்கு தீப்தி (16) என்ற மகள் உள்ளார்.
நடராஜன் சத்தியமங்கலம், தோப்பூர் அருகில் உள்ள கூட்டுறவு ரேசன் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நடராஜனும், அகிலாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். நடராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக நடராஜன் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று நடராஜன் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் விஷம் குடித்து தூங்கி விட்டார். மறுநாள் காலை நடராஜனுடன் பணிபுரியும் ரவிச்சந்திரன் நடராஜன் வீட்டுக்கு சென்ற போது நடராஜன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் நடராஜன்(வயது52). இவரது மனைவி அகிலா. இவர்களுக்கு தீப்தி (16) என்ற மகள் உள்ளார்.
நடராஜன் சத்தியமங்கலம், தோப்பூர் அருகில் உள்ள கூட்டுறவு ரேசன் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நடராஜனும், அகிலாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். நடராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக நடராஜன் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று நடராஜன் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் விஷம் குடித்து தூங்கி விட்டார். மறுநாள் காலை நடராஜனுடன் பணிபுரியும் ரவிச்சந்திரன் நடராஜன் வீட்டுக்கு சென்ற போது நடராஜன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






