என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் அருகே பைக் - கார் மோதல்: 2 மாணவர்கள் பலி
    X

    திருப்பத்தூர் அருகே பைக் - கார் மோதல்: 2 மாணவர்கள் பலி

    திருப்பத்தூர் அருகே பைக் மீது கார் மோதியதில் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பலியாகினர். மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிம்மனப்புதூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் தட்சிணாமூர்த்தி (வயது 17). இவரும், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் தருண் (17) என்பவரும் நண்பர்கள். இருவரும், அங்கு உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் 2 பேரும் பைக்கில் திருப்பத்தூருக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். பைக்கை தருண் ஓட்டினார். சிம்மனபுதூர் கூட்ரோடு அருகே வந்த போது, திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற கார் மோதியது.

    விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. இதில், மாணவன் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய தருண், தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தருணும் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2-ஆனது. விபத்து குறித்து, திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற காரை தேடி வருகிறார்கள். 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


    Next Story
    ×