என் மலர்
செய்திகள்

வண்டலூரில் திருமண மண்டபம் முன்பு வாலிபர் வெட்டிக்கொலை - மர்ம கும்பல் திடீர் தாக்குதல்
வண்டலூரில் திருமண மண்டபம் முன்பு மர்ம கும்பலின் திடீர் தாக்குதலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தொடரும் கொலை சம்பவத்தால் வண்டலூர் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கூடுவாஞ்சேரி:
அரக்கோணத்தை அடுத்த புளியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 35) விவசாயி. இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இவர்களது உறவினர் திருமணம் வண்டலூர் மேம்பாலம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. நேற்று இரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அரிதாஸ் உறவினர்களுடன் வண்டலூருக்கு வந்து இருந்தார்.
திருமண மண்டபம் முன்பு அரிதாஸ் நின்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தனர்.
அதிர்ச்சி அடைந்த அரிதாஸ் தப்பி ஓட முயன்றார். அவரை 4 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அரிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருமண மண்டபம் முன்பு நடந்த இந்த கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமணத்துக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சிலர் கொலையாளிகளை பிடிக்க முயன்றனர். கல்வீசியும் தாக்கினர். உஷாரான கொலை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. கொலையுண்ட அரிதாசுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் மோதல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் திருமணத்துக்கு செல்வதை அறிந்த மர்ம கும்பல் அரக்கோணத்தில் இருந்து பின் தொடர்ந்து வந்து கொலை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்.
கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதியில் கடந்த 3 நாட்களில், 3 கொலைகள் நடந்த உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் அருள்பதி, புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் எம்.ஜி. முருகன் ஆகியோர் தீர்த்து கட்டப்பட்டனர். தொடரும் கொலை சம்பவத்தால் வண்டலூர் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
அரக்கோணத்தை அடுத்த புளியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 35) விவசாயி. இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இவர்களது உறவினர் திருமணம் வண்டலூர் மேம்பாலம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. நேற்று இரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அரிதாஸ் உறவினர்களுடன் வண்டலூருக்கு வந்து இருந்தார்.
திருமண மண்டபம் முன்பு அரிதாஸ் நின்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தனர்.
அதிர்ச்சி அடைந்த அரிதாஸ் தப்பி ஓட முயன்றார். அவரை 4 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அரிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருமண மண்டபம் முன்பு நடந்த இந்த கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமணத்துக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சிலர் கொலையாளிகளை பிடிக்க முயன்றனர். கல்வீசியும் தாக்கினர். உஷாரான கொலை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. கொலையுண்ட அரிதாசுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் மோதல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் திருமணத்துக்கு செல்வதை அறிந்த மர்ம கும்பல் அரக்கோணத்தில் இருந்து பின் தொடர்ந்து வந்து கொலை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்.
கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதியில் கடந்த 3 நாட்களில், 3 கொலைகள் நடந்த உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் அருள்பதி, புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் எம்.ஜி. முருகன் ஆகியோர் தீர்த்து கட்டப்பட்டனர். தொடரும் கொலை சம்பவத்தால் வண்டலூர் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Next Story