என் மலர்
செய்திகள்

தாளவாடி அருகே பல லட்சம் மதிப்புள்ள அரிய மரங்களை வெட்டி கடத்தியது யார்?
தாளவாடி அருகே பல லட்சம் மதிப்புள்ள அரிய மரங்களை வெட்டி கடத்திய குற்றவாளிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி தாளவாடி அடுத்த பையனா புரத்தில் மைராடா வேளாண் அறிவியல் நிலையம் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு தேவையான வேளாண் பயிற்சி மற்றும் கடனுதவி ஆகியவற்றை வழங்கி வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனம் செயல்படாமல் புதர் மண்டி மூடிக்கிடக்கிறது. நிறுவன அலுவலர்கள் வெளியூரில் உள்ளதால் கவனிப்பாறின்றி கிடந்தது.
இந்த நிலையில், சிலர் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் இருந்த அரியவகை 67 மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
இது குறித்து, கிராமமக்கள் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரை கேட்டு கொண்டுள்ளனர்.
இந்த அரிய வகை மரங்களை கடத்திய குற்றவாளிகள் யார்? அவர்களை உடனே பிடிக்க வேண்டும். தப்பி விடக்கூடாது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி தாளவாடி அடுத்த பையனா புரத்தில் மைராடா வேளாண் அறிவியல் நிலையம் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு தேவையான வேளாண் பயிற்சி மற்றும் கடனுதவி ஆகியவற்றை வழங்கி வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனம் செயல்படாமல் புதர் மண்டி மூடிக்கிடக்கிறது. நிறுவன அலுவலர்கள் வெளியூரில் உள்ளதால் கவனிப்பாறின்றி கிடந்தது.
இந்த நிலையில், சிலர் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் இருந்த அரியவகை 67 மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
இது குறித்து, கிராமமக்கள் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரை கேட்டு கொண்டுள்ளனர்.
இந்த அரிய வகை மரங்களை கடத்திய குற்றவாளிகள் யார்? அவர்களை உடனே பிடிக்க வேண்டும். தப்பி விடக்கூடாது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.
Next Story






