என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே விஷம் குடித்து தொழிலாளி பலி
வேதாரண்யம் அருகே விஷம் குடித்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் பிராந்தியங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(50) விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தாராம். கடந்த 27-ந் தேதி உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் விவசாய பணிக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் இறந்து விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






