என் மலர்
செய்திகள்

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் உள்ளனர். அவர்கள் செல்போன் பயன்படுத்துவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையொட்டி சிறையில் இரவு காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆயுள் தண்டனை கைதியான திருப்பூர் மடத்துக்குளம் ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 41) என்பவர் தன்னுடைய அறையில் செல்போன் பேசிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த சிறைக்காவலர்கள் அவரிடம் இருந்த செல்போன், 2 சிம்கார்டுகள், பேட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சிறை அலுவலர் பரமேஸ்வரன் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் உள்ளனர். அவர்கள் செல்போன் பயன்படுத்துவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையொட்டி சிறையில் இரவு காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆயுள் தண்டனை கைதியான திருப்பூர் மடத்துக்குளம் ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 41) என்பவர் தன்னுடைய அறையில் செல்போன் பேசிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த சிறைக்காவலர்கள் அவரிடம் இருந்த செல்போன், 2 சிம்கார்டுகள், பேட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சிறை அலுவலர் பரமேஸ்வரன் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






