என் மலர்
செய்திகள்

மனைவி உடலை கொண்டு சென்றபோது ஆம்புலன்ஸ் மீது பஸ் மோதியதில் கணவர் பலி
வேப்பூர்:
சென்னையை சேர்ந்தவர் பாபு (வயது 60). இவரது மனைவி ராகிணி (55). இவர்கள் சொந்த ஊரான நெல்லை தென்காசிக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வந்திருந்தனர். உடல்நலக் குறைவால் ராகிணி திடீரென்று நேற்று இறந்தார்.
அவரது உடலை சென்னைக்கு ஆம்புலன்சில் ஏற்றி புறப்பட்டனர். ஆம்புலன்சில் கணவர் பாபு, அவரது உறவினர் ஒருவர் இருந்தார்.
ஆம்புலன்சு இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு திருச்சி- சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற கார் மீது ஆம்புலன்சு மோதி நடுரோட்டில் நின்றது.
இந்த நேரத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்தது. அந்த பஸ் நடுரோட்டில் நின்ற ஆம்புலன்சு மீது மோதியது. இதில் ஆம்புலன்சு அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த பாபு இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் சண்முகம் உள்பட 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.






