என் மலர்
செய்திகள்

பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடையில் மது விற்பனை
பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலியாக, செந்துறை அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெறுகிறது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடையால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டதோடு, குடியால் பல குடும்பங்கள் சீரழிவதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டினார்கள். எனவே, அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இருப்பினும் அந்த கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், கடந்த 17-ந்தேதி அந்த கடையின் பூட்டை உடைத்து அங்கு இருந்த மதுபாட்டில்களை சாலையில் கொண்டு வந்து போட்டு உடைத்தனர். இதனால் கடை மூடப்பட்டது. இது தொடர்பாக தளவாய் போலீசார் 20 பெண்கள் உள்பட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில் குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ், செந்துறை இன்ஸ்பெக்டர் கருணாநிதி, அரியலூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி உள்பட 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக அந்த கடை முன்பு குவிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் ஊழியர்கள் அகரம்சீகூர் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை கொண்டு வந்து அந்த கடையை திறந்து மது பாட்டில்களை விற்பனை செய்தனர். சிறிது நேரத்திலேயே மது பாட்டில்கள் அனைத்தும் வீற்று தீர்ந்ததால் மாலை 3 மணிக்கே கடை மூடப்பட்டது. இதேபோல் நேற்று மாலையும் அந்த கடையில் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. இதை அறிந்த கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடையால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டதோடு, குடியால் பல குடும்பங்கள் சீரழிவதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டினார்கள். எனவே, அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இருப்பினும் அந்த கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், கடந்த 17-ந்தேதி அந்த கடையின் பூட்டை உடைத்து அங்கு இருந்த மதுபாட்டில்களை சாலையில் கொண்டு வந்து போட்டு உடைத்தனர். இதனால் கடை மூடப்பட்டது. இது தொடர்பாக தளவாய் போலீசார் 20 பெண்கள் உள்பட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில் குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ், செந்துறை இன்ஸ்பெக்டர் கருணாநிதி, அரியலூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி உள்பட 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக அந்த கடை முன்பு குவிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் ஊழியர்கள் அகரம்சீகூர் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை கொண்டு வந்து அந்த கடையை திறந்து மது பாட்டில்களை விற்பனை செய்தனர். சிறிது நேரத்திலேயே மது பாட்டில்கள் அனைத்தும் வீற்று தீர்ந்ததால் மாலை 3 மணிக்கே கடை மூடப்பட்டது. இதேபோல் நேற்று மாலையும் அந்த கடையில் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. இதை அறிந்த கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
Next Story






