என் மலர்
செய்திகள்

மணல் கடத்திய 9 பேர் கைது: மினி லாரி பறிமுதல்
மணல் கடத்தியது தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த பெருநகர் ஆற்றுபடுகையில் மினி லாரியில் மணல் கடத்திய திருவண்ணாமலை மாவட்டம், அன்னபுத்தூர் கிராமத்தை சேர்ந்த அசோக்கை பெருநகர் போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் சின்ன காஞ்சீபுரம் ரங்கராஜவீதி, அம்மங்கார தெரு, மற்றும் அமுதபடி பின் தெரு ஆகிய பகுதிகளில் காஞ்சி போலீசார் சோதனை நடத்தினர் அப்போது பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட செவிலிமேடு, தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குமார், ராமதாஸ், வினோத், அன்பு, தசரதன், முனுசாமி, சேகர், அசோக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் அடுத்த பெருநகர் ஆற்றுபடுகையில் மினி லாரியில் மணல் கடத்திய திருவண்ணாமலை மாவட்டம், அன்னபுத்தூர் கிராமத்தை சேர்ந்த அசோக்கை பெருநகர் போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் சின்ன காஞ்சீபுரம் ரங்கராஜவீதி, அம்மங்கார தெரு, மற்றும் அமுதபடி பின் தெரு ஆகிய பகுதிகளில் காஞ்சி போலீசார் சோதனை நடத்தினர் அப்போது பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட செவிலிமேடு, தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குமார், ராமதாஸ், வினோத், அன்பு, தசரதன், முனுசாமி, சேகர், அசோக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






