என் மலர்
செய்திகள்

அ.தி.மு.க அணிகள் இணைப்பு: பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை இல்லை - ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க இரு அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு எங்கள் தரப்பில் எந்தவொரு முட்டுக்கட்டையும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆலந்தூர்:
முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-
போக்குவரத்துதுறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 2-வது நாளாக நீடிக்கிறது. பொது மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு தனி கவனம் செலுத்தி பிரச்சினையை தீர்க்க வேண்டும். தமிழக முதல்- அமைச்சர் நேரடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும்.
அ.தி.மு.க இரு அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு எங்கள் தரப்பில் எந்தவொரு முட்டுக்கட்டையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் உங்களை முதல் -அமைச்சராக்கியது ஜெயலலிதா செய்த தவறு என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளாரே என்று கேட்டனர்.
அதற்கு ஓ. பன்னீர்செல்வம், அது பற்றி கே.பி. முனுசாமி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார் என்றார்.
முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-
போக்குவரத்துதுறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 2-வது நாளாக நீடிக்கிறது. பொது மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு தனி கவனம் செலுத்தி பிரச்சினையை தீர்க்க வேண்டும். தமிழக முதல்- அமைச்சர் நேரடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும்.
அ.தி.மு.க இரு அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு எங்கள் தரப்பில் எந்தவொரு முட்டுக்கட்டையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் உங்களை முதல் -அமைச்சராக்கியது ஜெயலலிதா செய்த தவறு என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளாரே என்று கேட்டனர்.
அதற்கு ஓ. பன்னீர்செல்வம், அது பற்றி கே.பி. முனுசாமி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார் என்றார்.
Next Story






