என் மலர்
செய்திகள்

சென்னை அருகே ரூ.1 கோடி மருந்து பொருட்களுடன் லாரியை கடத்திய 7 பேர் கைது
சென்னை அருகே ரூ.1 கோடி மருந்து பொருட்களுடன் லாரியை கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் சிறையில் உள்ள சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கான மருந்து மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து கண்டெய்னர் லாரிகளில் மருந்து மூலப்பொருட்கள் சென்னை கொண்டு வரப்பட்டு கப்பல், விமானங்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும்.
கடந்த 4-ந்தேதி ரூ. 1 கோடி மதிப்புள்ள மருந்து மூலப்பொருட்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் சேகர் ஓட்டினார். பாதுகாப்புக்காக முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் உடன் இருந்தார். லாரிக்கு பின்னால் காரில் ஊழியர்கள் தாமஸ், வெங்கடேசன் ஆகியோர் வந்தனர்.
சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் என்ற இடத்தில் 10 பேர் கும்பல் லாரியை மறித்தது. தாங்கள் அரசு அதிகாரிகள் என்று கூறி லாரியை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.
திடீரென்று அக்கும்பல் டிரைவர் சேகர் உள்பட 4 பேரையும் அரிவாளால் தாக்கியது. பின்னர் கண்டெய்னர் லாரியை கடத்தி சென்றனர்.
இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளை கும்பலை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது.
தீவிர விசாரணை நடத்தி ராணிப்பேட்டையைச் சேர்ந்த மணி என்கிற சதீஸ்குமார், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கணேசன், ஆவடியைச் சேர்ந்த ஜெயக்குமார், படப்பையைச் சேர்ந்த அமானுல்லா, சைதாப்பேட்டையைச் சேர்ந்த பழனி, ரவிக்குமார் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சதீஸ்குமார் ராணிப்பேட்டை மருந்து தொழிற்சாலையில் 3 மாதத்துக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அப்போது வேலூர் சிறையில் கொலை வழக்கில் கைதாகி இருக்கும் நண்பர் சரவணன் என்பவரிடம் தான் வேலை பார்க்கும் கம்பெனியில் தயாரிக்கும் மருந்து மூலப்பொருள் மூலம் போதை தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சரவணன் சிறையில் இருந்தபடியே தனது ஆட்களை ஏற்பாடு செய்து சதீஷ்குமாருடன் சேர்ந்து கொள்ளையடிக்க அனுப்பி உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து 7 பேரையும் கைது செய்தனர். வேலூர் சிறையில் உள்ள சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கான மருந்து மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து கண்டெய்னர் லாரிகளில் மருந்து மூலப்பொருட்கள் சென்னை கொண்டு வரப்பட்டு கப்பல், விமானங்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும்.
கடந்த 4-ந்தேதி ரூ. 1 கோடி மதிப்புள்ள மருந்து மூலப்பொருட்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் சேகர் ஓட்டினார். பாதுகாப்புக்காக முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் உடன் இருந்தார். லாரிக்கு பின்னால் காரில் ஊழியர்கள் தாமஸ், வெங்கடேசன் ஆகியோர் வந்தனர்.
சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் என்ற இடத்தில் 10 பேர் கும்பல் லாரியை மறித்தது. தாங்கள் அரசு அதிகாரிகள் என்று கூறி லாரியை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.
திடீரென்று அக்கும்பல் டிரைவர் சேகர் உள்பட 4 பேரையும் அரிவாளால் தாக்கியது. பின்னர் கண்டெய்னர் லாரியை கடத்தி சென்றனர்.
இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளை கும்பலை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது.
தீவிர விசாரணை நடத்தி ராணிப்பேட்டையைச் சேர்ந்த மணி என்கிற சதீஸ்குமார், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கணேசன், ஆவடியைச் சேர்ந்த ஜெயக்குமார், படப்பையைச் சேர்ந்த அமானுல்லா, சைதாப்பேட்டையைச் சேர்ந்த பழனி, ரவிக்குமார் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சதீஸ்குமார் ராணிப்பேட்டை மருந்து தொழிற்சாலையில் 3 மாதத்துக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அப்போது வேலூர் சிறையில் கொலை வழக்கில் கைதாகி இருக்கும் நண்பர் சரவணன் என்பவரிடம் தான் வேலை பார்க்கும் கம்பெனியில் தயாரிக்கும் மருந்து மூலப்பொருள் மூலம் போதை தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சரவணன் சிறையில் இருந்தபடியே தனது ஆட்களை ஏற்பாடு செய்து சதீஷ்குமாருடன் சேர்ந்து கொள்ளையடிக்க அனுப்பி உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து 7 பேரையும் கைது செய்தனர். வேலூர் சிறையில் உள்ள சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
Next Story






