search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி கடத்தல்"

    • போலீசார் ேதடுவதை அறிந்த திருடர்கள் லாரியை காவல் நிலையம் அருகே ரோட்டில் நிறுத்தி நெல் மூட்டைகள் பாதிக்கு மேல் எடுத்து சென்று ள்ளனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரூர், 

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எச்.அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் 25 ஆண்டுகளாக அரூரில் நெல் வியாபாரம் செய்து வருகிறார்.

    அவரது ஓட்டுநர் கிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி பகுதியிலிருந்து 230 நெல் மூட்டைகளை விலைக்கு வாங்கி லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது நரிப்பள்ளி சோதனை சாவடியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் லாரியை வழி மறித்துள்ளனர். பின்னர் ஓட்டுநர் கிருஷ்ணனை அடித்து துன்புறுத்தி கட்டி போட்டு விட்டு லாரியை கடத்தி சென்றனர்.

    இது குறித்து கோட்டப்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

    போலீசார் ேதடுவதை அறிந்த திருடர்கள் லாரியை கோட்டப்பட்டியில் காவல் நிலையம் அருகே ரோட்டில் நிறுத்தி நெல் மூட்டைகள் பாதிக்கு மேல் எடுத்து சென்று ள்ளனர்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பென்னாகரம் மேம்பாலம் அருகில் லாரிகள் நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தியுள்ளார்.
    • இன்றுகாலை சென்று பார்க்கும் போது லாரி காணவில்லை

    தருமபுரி,

    தருமபுரி குமாரசாமி பேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் நேற்று லாரிக்கு பூஜை போட்டு பென்னாகரம் மேம்பாலம் அருகில் லாரிகள் நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தியுள்ளார்.

    பின்னர் லாரியை பூட்டி விட்டு வீட்டிற்கு திரும்பினார். பின்னர் இன்றுகாலை சென்று பார்க்கும் போது லாரி காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×