என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
Byமாலை மலர்11 May 2017 10:29 AM GMT (Updated: 11 May 2017 10:29 AM GMT)
பருவமழை பொய்த்ததன் காரணமாக பாலாற்றில் ஏற்கனவே நீர்மட்டம் குறைந்து உள்ளது. தற்போது கடும் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகளில் சிறிதளவு உள்ள நீரும் வெகுவேகமாக குறைந்து வருகிறது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பெருநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது 51 வார்டுகளை கொண்டுள்ளது. தினமும் 20 லட்சம் மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பாலாற்றில் 3 கிணறுகள், இரண்டு தரைவழி கிணறுகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் அளிக்கப்படுகிறது.
இதுதவிர 10 போர்வெல்கள் மூலமும் குடிநீர் பெறப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. மேலும் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட சிறுமின்விசை பம்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதியிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் மூலம் வினியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பருவமழை பொய்த்ததன் காரணமாக பாலாற்றில் ஏற்கனவே நீர்மட்டம் குறைந்து உள்ளது. தற்போது கடும் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகளில் சிறிதளவு உள்ள நீரும் வெகுவேகமாக குறைந்து வருகிறது.
இதனால் பொது மக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீரின் அளவு கடந்த சில நாட்களாக நாள்ஒன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர்கள் குறைவாக சப்ளை செய்யப்படுகிறது.
எனவே நாளுக்குநாள் கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில் குடிநீர் சப்ளையில் பெரும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் காஞ்சீபுரம் நகரின் பல பகுதிகளில் பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.
காஞ்சீபுரம் பெருநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது 51 வார்டுகளை கொண்டுள்ளது. தினமும் 20 லட்சம் மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பாலாற்றில் 3 கிணறுகள், இரண்டு தரைவழி கிணறுகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் அளிக்கப்படுகிறது.
இதுதவிர 10 போர்வெல்கள் மூலமும் குடிநீர் பெறப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. மேலும் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட சிறுமின்விசை பம்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதியிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் மூலம் வினியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பருவமழை பொய்த்ததன் காரணமாக பாலாற்றில் ஏற்கனவே நீர்மட்டம் குறைந்து உள்ளது. தற்போது கடும் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகளில் சிறிதளவு உள்ள நீரும் வெகுவேகமாக குறைந்து வருகிறது.
இதனால் பொது மக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீரின் அளவு கடந்த சில நாட்களாக நாள்ஒன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர்கள் குறைவாக சப்ளை செய்யப்படுகிறது.
எனவே நாளுக்குநாள் கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில் குடிநீர் சப்ளையில் பெரும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் காஞ்சீபுரம் நகரின் பல பகுதிகளில் பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X